ஈரோடு மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்
ஈரோடு மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் மல்லிகா பரமசிவன்
ஈரோடு மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் மல்லிகா பரமசிவன் மாநகராட்சிக் கூட்டத்தில் பேசி வருகிறார். ரூ.160.94 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், புதிய வரிகள் இல்லை. சிறப்பம்சமாக பத்தாம் வகுப்பு, +2 தேர்வுகளில் முதலிடத்தில் வரும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான விளக்குகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த பட்ஜெட் தாக்கலின்போது, துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி ஆகியோரும் உடன் இருந்தனர்.