சட்டவிரோதமாக ரேக்ளா பந்தயம்: 32 பேர் கைது
பல்லடம் அருகே சட்டவிரோதமாக ரேக்ளா பந்தயம் நடத்திய கோயமுத்தூரைச் சேர்ந்த 32 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பல்லடம் அருகே சட்டவிரோதமாக ரேக்ளா பந்தயம் நடத்திய கோயமுத்தூரைச் சேர்ந்த 32 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 ஆட்டோக்கள், வண்டிகள் உள்ளிட்டவையும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.