ஸ்ரீநடராஜர் கோயிலில் அப்பர் குருபூஜை!
ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதிஉலா நிகழ்ச்சியும், மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. த.செல்வரத்தின தீட்சிதர் முதன்மை உரையாற்றினார். அப்பர் சுவாமிகள் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நா.புகழேந்தி
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலும், தருமைஆதீன கிளை மடத்திலும் சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் சுவாமிகள் குருபூஜை விழா நடைபெற்றது.
ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதிஉலா நிகழ்ச்சியும், மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. த.செல்வரத்தின தீட்சிதர் முதன்மை உரையாற்றினார். அப்பர் சுவாமிகள் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நா.புகழேந்தி சொற்பொழிவாற்றினார். தமிழாசிரியர் மு.கல்யாணராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தருமைஆதீன கிளைமடத்தில் சிவபூஜையும், மகேஸ்வரபூஜையும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை தருமைஆதீன தொண்டர்கள் செய்திருந்தனர்.