அண்ணாமலைப் பல்கலையில் மேலும் ஒரு சிறப்பு அதிகாரி பொறுப்பேற்பு!
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்ஸிற்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் உள்ள தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்ஸிற்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் உள்ள தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகிய இருவரை உதவி நிர்வாக சிறப்பு அலுவலர்களாக தமிழகஅரசு உயர்கல்வித்துறையால் நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்று நிர்வாகம் மற்றும் கணக்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொருவரான ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி ஸ்ரீமாலினி என்பவர் உதவி நிர்வாக சிறப்பு அலுவலர்-3 ஆக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் நெய்வேலி நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.