கொள்ளிடம் ஆற்றில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சடலம்!
நாகை மாவட்டம் உதயம் நகரைச் சேர்ந்த தங்கராஜ் (59). இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது நாகை மாவட்டம் மணல்மேடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் அருகே
காட்டுமன்னார்கோயில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
நாகை மாவட்டம் உதயம் நகரைச் சேர்ந்த தங்கராஜ் (59). இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது நாகை மாவட்டம் மணல்மேடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் அருகே வீரசோழபுரம் எனுமிடத்தில் கடலூர் மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜன் புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.