தூத்துக்குடி பகுதியில் மத்தியக் குழுவினர் பார்வை
தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான மத்தியக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். இன்று காலை வாலசமுத்திரம் பகுதியில் பார்வையிட்ட மத்தியக் குழுவினர் மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான மத்தியக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். இன்று காலை வாலசமுத்திரம் பகுதியில் பார்வையிட்ட மத்தியக் குழுவினர் மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
முன்னதாக மாவட்ட நிர்வாகம் சரியான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மத்தியக் குழுவினர் வரும் தகவல் பொதுமக்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மேலும், பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்லவும் சரியான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்தனர்.