அன்னையருக்கு பாதபூஜை செய்து அன்னையர் தினம் கொண்டாட்டம்!
நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவன மாணவ, மாணவியர்கள் அன்னைக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் அன்னையர்களுக்கு நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் முன்னிலை வகித்து இலவச
சிதம்பபம் ஆர்.கே.ஜி பவுன்டேஷன் மற்றும் வின்சாஃப்ட் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் இணைந்து அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியை மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் நடத்தியது.
நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவன மாணவ, மாணவியர்கள் அன்னைக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் அன்னையர்களுக்கு நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் முன்னிலை வகித்து இலவச கணினி பயிற்சி பெற்ற 50 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஆர்.கே.ஜி பவுன்டேஷன் தலைவர் நிர்மலா கோதண்டராமன் வரவேற்றார். ரபியாபேகம், சித்ரா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சிதம்பரம் தகதிமிதா கலைக்குழு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொருளாளர் கெளரி கோதண்டராமன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். ஹேமலதா நன்றி கூறினார்.