பஸ்நிலையத்தில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது!
சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் நேற்று(திங்கள்கிழமை) பஸ்நிலைய பகுதியில் இரவு ரோந்து சென்றனர். அப்போது புதுச்சேரியிலிருந்து
சிதம்பரம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை விற்ற ஒருவரை நகர போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் நேற்று(திங்கள்கிழமை) பஸ்நிலைய பகுதியில் இரவு ரோந்து சென்றனர். அப்போது புதுச்சேரியிலிருந்து எடுத்து வந்து சிதம்பரம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை விற்ற பி.முட்லூரைச் சேர்ந்த ஷேக்மாலிக் (41) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 8 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.