ஸ்ரீவிலி.யில் கஞ்சா விற்ற பெண் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், போலீஸ் படையுடன், அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் உள்ள அய்யம்பட்டி தேவர் தெற்குத் தெரு பிள்ளையார் கோயில் அருகே ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அய்யம்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மனைவி ராக்கு (51) என்பவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.