முகப்பு
தற்போதைய செய்திகள்

டிராக்டர் மோதி ஒருவர் பலி

  பழனி அருகே டிராக்டர் மோதியதில் ஒருவர் பலியானார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:50 AM
பகிர்:

  பழனி அருகே டிராக்டர் மோதியதில் ஒருவர் பலியானார்.     பழனி அருகே வேப்பன்வலசு 9வது வார்டை சேர்ந்தவர் முருகன் மகன் சரவணக்குமார்(24). இவர் பள்ளிக்கூடத்தான்வலசை சேர்ந்த தண்டபாணி என்பவரது டிராக்டருக்கு டிரைவராக உள்ளார்.  கடந்த செவ்வாய்க்கிழமை டிராக்டரை நிறுத்தியிருந்த போது லோடுமேனாக வேலை செய்யும் வேப்பன்வலசை சேர்ந்த குமரன் மகன் பெருமாள் என்பவர் டிராக்டரை ஸ்டார்ட் செய்துள்ளார்.  அப்போது சரவணக்குமார் டிராக்டரை நிறுத்துமாறு ஓடியுள்ளார்.  அப்போது பெருமாள் டிராக்டரை ஓட்டத் தெரியாமல் ஓட்டி சரவணக்குமார் மீது மோதியதில் பலத்த காயமடைந்து ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  பின்னர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்து போனார்.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.