முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே நகையை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்தியதாக,மகளிர் காவல் நிலைய போலீஸார் கணவனை கைது செய்துள்ளனர்.

சாத்தூர் அருகே நகையை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்தியதாக,மகளிர் காவல் நிலைய போலீஸார் கணவனை கைது செய்துள்ளனர்.

Updated On : 23 மே, 2013 at 10:51 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:22 PM

சாத்தூர் அருகே நகையை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்தியதாக,மகளிர் காவல் நிலைய போலீஸார் கணவனை கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுரார்பட்டியை சேர்ந்த காளீஸ்வரி(23)இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கமாரியப்பன்(25)இருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணமானது.திருமணத்தின் போது 7பவுன் நகை வரதட்சனை தருவதாக காளீஸ்வரி குடும்பத்ததார் தெரிவித்ததாகவும்,5பவுன் நகை மட்டும் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் 2பவுன் நகையை தருமாறு தங்கமாரியப்பன்,அவரது தாய் சடையச்சி(55),அக்கா காளியம்மாள்,அண்ணன் செந்தில்வேல் ஆகியோர் காளீஸ்வரியை கொடுமைபடுத்தியதாக சாத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் சடையச்சி,காளியம்மாள்,செந்தில்வேல் மீது வழக்கு பதிவு செய்து தங்கமாரியப்பனை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.