முகப்பு
தற்போதைய செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு முகாம்: ஆன்லைன் கிடைக்காத காரணத்தால் தாமதம்

விருதுநகரில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் வி்டடு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு முகாமில் ஆன்லைன் கிடைக்காத காரணத்தால் மாலை வரையில் தாமதம் ஆனாது. 

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:22 PM

விருதுநகரில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் வி்டடு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு முகாமில் ஆன்லைன் கிடைக்காத காரணத்தால் மாலை வரையில் தாமதம் ஆனாது. 

விருதுநகரில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்  கலந்தாய்வு முகாம் காலையில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே கலந்தாய்வு முகாம் நடைபெற இருக்கிற கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால், ஆன்லைன் கிடைக்காத காரணத்தால் 11.30 மணிக்கு தாமதமாகவே தொடங்கியது. அதேபோல், ஆசிரியர்கள் அனைவரும் நீண்டநேரம் காத்திருந்தனர்.

மேலும், பிற்பகல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுகிறவர்களுக்கான கலந்தாய்வு முகாம் நடைபெற்றது. ஆனால், ஆன்லைன் சரிவர கிடைக்காத காரணத்தால் மாலை 5 மணி வரையில் நடைபெறவே இல்லை. இதனால், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் நீண்டநேரம் காத்திருந்தனர்.

Advertisement

இது குறித்த முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் கூறியதாவது: இணைய தள ஆன்லைனில் கலந்தாய்வு முகாம் நடத்துவதன் மூலம் காலிப்பணியிடம் அனைத்தும் வெளியிடப்படும். அதன் மூலம் காலியிடங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். அதனாலேயே முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், இதுவரையில் ஆன்லைன் செயல்படாததால் ஆசிரியர்கள் அனைவரும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.