முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை இணையதளம் மூலம் கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நாடுனர்களுக்கு இணையதள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை நாளை திங்கள்கிழமை (மே 27) வழங்கப்படவுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நாடுனர்களுக்கு இணையதள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை நாளை திங்கள்கிழமை (மே 27) வழங்கப்படவுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர் தாவரவியல் பாடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பணி நாடுனர்களுக்கு இணையத்தள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை வழங்கப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலை 9.30 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை, அசல் கல்விச் சான்றுகள் மற்றும் கல்விச் சான்றுகளின் சான்றொப்பமிடப்பட்ட நகல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அட்டையுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
Advertisement
அதேபோன்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தொகுதி 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர்கள் பணிக்கு தேர்வு பெற்று பள்ளிக் கல்வித் துறைக்கு, துறை ஒதுக்கீடு செய்யப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பணி நாடுனர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.