முகப்பு
தற்போதைய செய்திகள்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர் விபத்தில் சிக்கி சாவு!

பரங்கிப்பேட்டை சின்னத்தெருவைச் சேர்ந்த முகமது (38). சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இவர் 2 மாதம் முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு விருத்தாசலம் செல்வதற்காக புவனகிரி பஸ்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:57 AM
பகிர்:

சிதம்பரம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

பரங்கிப்பேட்டை சின்னத்தெருவைச் சேர்ந்த முகமது (38). சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இவர் 2 மாதம் முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு விருத்தாசலம் செல்வதற்காக புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து தனியார் பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது புவனகிரி அருகே பெருமாத்தூர் எனுமிடத்தில் தனியார் பஸ் மற்றொரு பஸ்ஸை முந்திய போது படிக்கட்டில் பயணம் செய்த முகமது உருண்டு கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →