காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தி 12-ல் முழு அடைப்பு: தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் தமிழ் அமைப்புகள் அமைப்புகள் அறிவித்துள்ளன.
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தைப் பெரியார் திராவிடர் கழம், மனிதநேய மக்கள் கட்சி உள்பட 21 அமைப்புகள் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த, இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், முழு அடைப்புப் போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
Advertisement