முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் ஆணையத்திடம் திமுக மீண்டும் புகார்

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக, தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வருகிறது. இது குறித்து ஏற்கெனவே தங்களிடம் புகார் அளித்துள்ளோம்.நவம்பர் 10-ம் தேதி விதிமுறைகளை

Updated On : 16 நவம்பர், 2013 at 6:01 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:18 AM

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருவதாக திமுக மீண்டும் புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கு சனிக்கிழமை அனுப்பிய மனுவில் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பதாவது:

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக, தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வருகிறது. இது குறித்து ஏற்கெனவே தங்களிடம் புகார் அளித்துள்ளோம்.நவம்பர் 10-ம் தேதி விதிமுறைகளை மீறி 10-க்கும் அதிகமான வாகனங்களுடன் சென்று அதிமுக வேட்பாளர் சரோஜாவும், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரசாரம் செய்துள்ளனர்.ஏற்காடு தொகுதிக்குப்பட்ட கக்கம்பாடி கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரியும் லோகநாதன் என்பவர், அமைச்சருடன் பிரசாரத்துக்குச் சென்றுள்ளார். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.