சிதம்பரத்தில் தமிழகக் கல்வியாளர் கழகம் என்ற அமைப்பு தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலம் தழுவிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு நிறுவனத் தலைவராக ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.கலைச்செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளராக ஓய்வுபெற்ற உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வி.விஜயராகவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆ.கலைச்செல்வன் தெரிவித்தது: இந்த அமைப்பானது தமிழகக் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும். கல்வி ஆலோசனைகளை வழங்கும், குறை, நிறைகளை சுட்டிக்காட்டி கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.