முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே பிடிபட்ட ஜமுக்கால விரியன் பாம்பு!

சிதம்பரம் அருகே சக்திநகர் ரவி சிமெண்ட் ஒர்க்ஸில் உள்ள சிமெண்ட் தொட்டியில் திங்கள்கிழமை காலை நாலரை நீள ஜமுக்கால விரியன் பாம்பு இருந்தது கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய ஜமுக்கால விரியன் பாம்பினை வனத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.

சிதம்பரம் அருகே சக்திநகர் ரவி சிமெண்ட் ஒர்க்ஸில் உள்ள சிமெண்ட் தொட்டியில் திங்கள்கிழமை காலை நாலரை நீள ஜமுக்கால விரியன் பாம்பு இருந்தது கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு மீட்புத் துறையினர் மற்றும் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிமெண்ட் தொட்டியில் இருந்த ஜமுக்கால விரியன் பாம்பினை பிடித்து அருகாமையில் உள்ள காப்புக்காட்டில் கொண்டுவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.