முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூர்:6 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

திருக்கோவிலூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் சையத்சர்தார் மகன் முகமதுசாகிப் (6 மாத குழந்தை). இக்குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 திருக்கோவிலூரில் 6 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.

 திருக்கோவிலூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் சையத்சர்தார் மகன் முகமதுசாகிப் (6 மாத குழந்தை). இக்குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது  அக்குழந்தைக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 இதையடுத்து திருக்கோவிலூர் நகர்ப் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செவ்வாய்கிழமை தீவிர துப்புரவுப் பணி மற்றும் நோய்த் தடுப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →