அழகர்கோவில் மலையில் துப்பாக்கியுடன் இருவர் கைது
அழகர்கோவில் மலையில் மான்கள்,காட்டுஎருமை, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இதை வேட்டையாடும் நோக்கத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற இருவரை போலீஸார்
அழகர்கோவில் மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிய இருவரை மேலவளவு போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்தனர்.
அழகர்கோவில் மலையில் மான்கள்,காட்டுஎருமை, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இதை வேட்டையாடும் நோக்கத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற இருவரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில்பட்டூர் ஆலம்பட்டியை சேர்ந்த பூமி 9(30), பச்சை (50) என தெரியவந்துள்ளது.
போலீஸார் இருவரிடமும் இருந்த 2 துப்பாக்கிகளையும் ரவை வெடிமருந்தையும் கைப்பற்றி கைது செய்தனர். இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க மேஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.