சட்டவிரோதமாக மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
ஆம்பூர் பகுதியில் வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய சோதனையில் முறைகேடாக மணல் அள்ளிச் சென்ற 2 டிராக்டர் மற்றும் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூர் பகுதியில் வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய சோதனையில் முறைகேடாக மணல் அள்ளிச் சென்ற 2 டிராக்டர் மற்றும் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூர் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாபு தலைமையில் கிராம நிர்வாக அதிகாரிகள் முருகேசன், கோவிந்தசாமி, சாமிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். பாலூர், கதவாளம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு டிராக்டர் மற்றும் துத்திப்பட்டு பகுதியில் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.