முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் நூலக வரி ரூ. 4 கோடி வசூல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வர வேண்டிய நூலக வரி ஒரே மாதத்தில் ரூ. 4 கோடி வசூலிக்கப்பட்டு்ள்ளது. மேலும் ரூ. 1 கோடி நிலுவை இருப்பதாக மாவட்ட நூலகர் க. மந்திரம் தெரிவித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:55 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வர வேண்டிய நூலக வரி ஒரே மாதத்தில் ரூ. 4 கோடி வசூலிக்கப்பட்டு்ள்ளது. மேலும் ரூ. 1 கோடி நிலுவை இருப்பதாக மாவட்ட நூலகர் க. மந்திரம் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.
முதல் நிலை நூலகம் திருநெல்வேலி நகரில் இயங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் இது தவிர 99 கிளை நூலகங்களும், 86 ஊர்புற நூலகங்களும், 2 பகுதி நேர நூலகங்களும், ஒரு நடமாடும் நூலகம் உள்பட 190 நூலகங்கள் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட மைய நூலகத்தில் 43,683 உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், போன்ற போட்டித் தேர்வுகளுக்கான 45,000 புத்தகங்கள் உள்பட இங்கு 1.50 லட்சம் புத்தகங்கள் உள்ளன. 220 புரவலர்கள் உள்ளனர். மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்கள் சந்தா, புரவலர்கள் நிதியாக ரூ. 1.5 கோடி முதலீட்டில் உள்ளது. முதலீட்டில் இருந்து கிடைக்கும் வட்டியில் புத்தகங்கள், நூலகக் கட்டடங்களின் வாடகை போன்றவை செலுத்தப்படுகிறது.

மாவட்ட நூலகர் க. மந்திரம் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சொத்து வரியில் 10 சதவிகிதம் நூலக வரியாக, நூலக ஆணைக் குழு கணக்கில் செலுத்தப்படும். நூலக வரியில் இருந்து நூலகர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய 7 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 475 கிராம ஊராட்சிகளில் வசூலிக்கப்பட்ட நூலக வரி ரூ. 5 கோடி நூலகக் கணக்கில் செலுத்தப்படாமல் நிலுவையாக இருந்தது.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையினால் இம்மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நூலக வரி ஒரே மாதத்தில் ரூ. 4 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையாக உள்ள ரூ. 1 கோடி விரைவில் வசூலாக வாய்ப்புள்ளது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →