முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறார் தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு

தருமபுரி மாவட்டத்தில் சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்திலுள்ள

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:59 PM
பகிர்:

தருமபுரியில் ஜவுளிக்கடை, தேநீர் கடைகளில் பணி புரிந்த வந்த 7 சிறார் தொழிலாளர்கள் புதன்கிழமை மீட்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்திலுள்ள அங்காடிகள், உணவகங்கள் மற்றும் தொழில்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலரகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதையொட்டி அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மீட்கப்படும் சிறார்கள் தங்களது கல்வியை தொடரும் வகையில் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

இதில் ஆட்சியர் கே.விவேகானந்தன் உத்தரவின் பேரில், தருமபுரி நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் எம்.எஸ்.சரவணன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் லட்சுமி, மருத்துவ அலுவலர் ஆனந்த், சைல்டு லைன் குபேந்திரன், மாவட்ட குழந்தை நல சங்க அலுவலர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜவளிக்கடை, காலணி விற்பனைக்கடை, தள்ளுவண்டி ஆகிய கடை மற்றும் தேநீர் கடைகளில் பணி புரிந்த பிரபு(12), முருகன்(15), ஆதில்பாஷா(15), ராஜி(14), முனிரத்தினம், அஜித்(13) மற்றும் சிவக்குமார்(15) உள்ளிட்ட 7 சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சிறார் தொழிலாளர்களான அஜித் மற்றும் சிவக்குமார் ஆகியோர் பேருந்து நிலையத்தில் ஊசி மணிகளை விற்றவர்களாவர். இவர்களை அதிகாரிகள் மீட்டு, காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, இரு சிறுவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இரு சிறுவர்களும் தப்பி ஓடினர். மற்ற 5 சிறார் தொழிலாளர்களை தொப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →