சிதம்பரம் அரசு மகளிர் பள்ளியை தத்தெடுத்தது குழந்தை நல மருத்துவர் சங்கம்
சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தத்தெடுத்துள்ளது. சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தத்தெடுத்து மாணவியர்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கவுள்ளது.
சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தத்தெடுத்துள்ளது. சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தத்தெடுத்து மாணவியர்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கவுள்ளது.
பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குழந்தை நல மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம் பள்ளியை தத்தெடுத்ததற்கான ஆவணங்களை தலைமை ஆசிரியர் ராஜனிடம் வழங்கினார்.
மேலும் பிரதி மாதம் வெள்ளிக்கிழமை மாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளியில் மாணவியர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என டாக்டர் வி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.