சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
சிதம்பரம் அருகே புதன்கிழமை இரவு டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.
சிதம்பரம் அருகே புதன்கிழமை இரவு டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.
சிதம்பரம் அருகே பொய்யாப்பிள்ளைச்சாவடியில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. புதன்கிழமை இரவு 10 மணிக்கு கடை விற்பனையாளர்கள் அருள்ஜோதி, பாலமுருகன் ஆகியோர் கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில் இரவு மர்ம நபர்கள் கடையின் மூன்று பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1220 ரொக்கம் மற்றும் 4 குவார்ட்டர் பாட்டில்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து தாலுக்கா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.