அறந்தாங்கியில் மளிகைக் கடைக்காரர் வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை
இன்று அதிகாலையில் மளிகைக் கடைக்காரர் பிர.சுப்பையா என்பவரின் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். அ
அறந்தாங்கியில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் மளிகைக் கடைக்காரர் பிர.சுப்பையா என்பவரின் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். அவர் பல இடங்களில் இருந்து விற்ற பொருள்களுக்கான பணத்தை சேகரித்து வைத்திருந்ததாகவும், அதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றதாகவும் போலீஸாரிடம் சுப்பையா கூறினார். போலீஸார் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.