நாளை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நாளை நவ.30-ம் தேதி சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் நடைபெறுகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நாளை நவ.30-ம் தேதி சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், தமிழகஅரசு நிதித்துறை முதன்மைச் செயலர், தமிழகஅரசு தொழிற்கல்வித்துறை ஆணையர், அரசு உதவிச்செயலாளர் (சட்டம்), தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர், பதிவாளர் என்.பஞ்சநதம் மற்றும் புல முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாகம் குறித்தும், சீரமைப்பு குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.