காவிரி பாசனப் பகுதியில் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி சாலைமறியல்
வறட்சியினால் பாதிக்கப்பட்ட காவிரி பாசனப் பகுதிகளில், அரசு அறிவித்த சம்பா பயிருக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி திருத்துறைப்
வறட்சியினால் பாதிக்கப்பட்ட காவிரி பாசனப் பகுதிகளில், அரசு அறிவித்த சம்பா பயிருக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி திருத்துறைப் பூண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், கிழக்குக் கடற்கரைச் சாலை புறவழிச்சாலை, நெடுங்குளம், மணலி, ஆலத்தம்பாடி, கச்சணம் உள்ளிட்ட 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ சார்பில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.