ஆம்பூர் பகுதியில் அனுமதியின்றி முறைகேடாக மணல் அள்ளிச் சென்ற லாரி, டிராக்டர் உள்பட 8 வாகனங்களை வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், ரமேஷ், பழனி, சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முறைகேடாக மணல் அள்ளிச் சென்ற சோலூர் கிராமத்தில் தலா ஒரு லாரி மற்றும் டிராக்டர், ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் 3 மாட்டு வண்டிகள், ஏ-கஸ்பா பகுதியில் 2 மாட்டு வண்டிகள், கைலாசகிரி கிராமத்தில் ஒரு மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.