கருப்பசாமி பாண்டியன் மீது புகார் கூறிய பெண்ணின் தம்பி தற்கொலைக்கு முயற்சி
திருநெல்வேலி நகரப் பகுதியைச் சேர்ந்த திமுக இலக்கிய அணி நிர்வாகி கு. நாலடியார். இவரது மகள் தமிழரசி, திமுக மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் மீது கடந்த மாதம் டிஐஜி-யிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு
கருப்பசாமி பாண்டியன் மீது புகார் கூறிய பெண்ணின் தம்பி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி நகரப் பகுதியைச் சேர்ந்த திமுக இலக்கிய அணி நிர்வாகி கு. நாலடியார். இவரது மகள் தமிழரசி, திமுக மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் மீது கடந்த மாதம் டிஐஜி-யிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தானும் தனது தம்பி குறளமுதன், தந்தை நாலடியார், தாய் காந்திமதி ஆகியோர் குடும்பத்துடன் திமுக-விலிருந்து விலகுவதாக கடந்த 28ஆம் தேதி தமிழரசி தெரிவித்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை தமிழரசியின் தம்பி குறளமுதன் (29), விஷம் குடித்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவர், திருநெல்வேலி பாரதியார் தெருவில் மனைவி கஸ்தூரி மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.இவரை கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர் ஒருவர் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மிரட்டி வந்தாராம். மேலும், புதன்கிழமை இரவு கொக்கிரகுளம் அருகே குறளமுதனிடம் பேசிய அந்த ஆதரவாளர், குறளமுதனின் மனைவி தொடர்பாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
இதனால் விரக்தியடைந்த குறளமுதன், வீட்டிலிருந்த காலாவதியான 3 மருந்துபாட்டில்களை எடுத்துக் குடித்து விட்டாராம். உடல்நலம்பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருநெல்வேலி நகரப் போலீஸார் குறளமுதனிடம் வாக்குமூலம் பெற்றனர். வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்ட நபர் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளதாகவும், அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.