முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரமாண்டமான கொலு!

ஸ்ரீநடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரியை முன்னிட்டு 22 அடி உயரத்தில் 18 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி தொடங்கிய இந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 22 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு நவராத்திரி தொடக்க தினமான சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

ஸ்ரீநடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரியை முன்னிட்டு 22 அடி உயரத்தில் 18 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி தொடங்கிய இந்த கொலு வருகிற அக்.13-ம் தேதி நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.

கொலுவில் ஸ்ரீநடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர். நவராத்திரி கொலு குறித்து கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான உ.வெங்கடேச தீட்டிதர் தெரிவித்தது: ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரிணாம வளர்ச்சிகளை வணங்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.