கீழணையிலிருந்து பாசனத்திற்கு கூடுதலாக நீர் திறந்து விட கோரி விவசாயிகள் சாலைமறியல்
கீழணையிலிருந்து வடவாற்றில் 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை
கீழணையிலிருந்து வடவாற்றில் 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழணையிலிருந்து போதிய அளவு நீர் திறந்துவிடப்பட்டததால், நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீரின்றி பயிர்கள் காய்ந்து வருவதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் டீசல் என்ஜின் மூலம் நீண்ட தூரத்திலிருந்து நீரை வயலுக்கு கூடுதல் செலவு செய்து கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கீழணையிலிருந்து வடவாறு பாசனத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே பெரியபுங்கனேரி, சிறியபுங்கனேரி ஆகிய கிராம விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்வகுளம் எனுமிடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.