மணல் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
பண்ருட்டி வட்டம், புலவனூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு இங்கிருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுகிறது
புலவனூர் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுக்கக் கூடாது என 75-ம்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் லாரிகளை முற்றுகையிட்டு திங்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
பண்ருட்டி வட்டம், புலவனூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு இங்கிருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுகிறது.இங்குள்ள சுடுகாடு அருகே அரசு விதி முறைகளை மீறி மணல் எடுக்கப்படுவதாகவும், மணல் லாரிகள் செல்ல சாலை அமைக்கப்பட்டதால் சுடுகாடு சேதம் அடைவதாகவும், லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிõளினர்கள் குடித்து விட்டு கும்மாளம் போடுவதாலும், மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பிடுங்கியும், உடைத்து சேதம்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுவதாக கூறியவர்கள், பெண்கள் வயல் வெளி வேலைக்கு செல்ல முடியவில்லை என கூறி குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்ருட்டி ஆய்வாளர் சிவசுப்பு, பொதுமக்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தார்.