முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவி வெட்டி கொலை: கணவன் தற்கொலை முயற்சி

திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்நதவர் எழிலப்பன்(42).கூலி தொழிலாளியான இவருக்கு விமலா(40) என்ற மனைவியும் விஜி என்ற மகளும் உள்ளனர்.எழிலப்பனுக்கும் அவரது மனைவிக்கும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திண்டிவனம் அருகே மனைவியை வெட்டி கொன்ற கணவன் தனது கழுத்தை அறுத்து  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்நதவர் எழிலப்பன்(42).கூலி தொழிலாளியான இவருக்கு விமலா(40) என்ற மனைவியும் விஜி என்ற மகளும் உள்ளனர்.எழிலப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.இந்நிலையில் ஞாயிற்றுகிழமை இரவு எழிலப்பன் தனது மனைவியை அரிவாளால் வெட்டி உள்ளார்.இதில் சம்பவ இடத்திலேய் விமலா இறந்து விட்டார்.இதனை கண்ட எழிலப்பன் பயந்து போய் தனது கழுத்தை தானே அரிவாளால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.அப்போது அவர் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து அவர் புதுவை ஜிம்பர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.ரோசனை போலீஸார் எழிலப்பனின் வீட்டில் இருந்த விமலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை குறித்து வழக்கு பதிóந்துள்ள போலீஸார் வசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →