அண்ணாமலைப் பல்கலையில் பறக்கும்படை அமைப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் முறைகேடுகளை களையவும், நிதிநெருக்கடியை சீரமைக்கவும் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளை கண்காணிக்க "பறக்கும்படை" அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் முறைகேடுகளை களையவும், நிதிநெருக்கடியை சீரமைக்கவும் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரீமாலினி தலைமையில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படைக்கு தனிவாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும்படை அனைத்து புலங்கள், விடுதிகள் ஆகியவற்றை கண்காணித்து குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து அறிந்து பல்கலைக்கழக நிர்வாகி மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளும் என பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.