அரிசிஆலை இயந்திரத்தில் சிக்கி ஒருவர் சாவு
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டை இக்பால்தெருவைச் சேர்ந்த அப்துல்அலி (50). இவர் லால்பேட்டை தோப்புத்தெருவில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றுகிறார். திங்கள்கிழமை இரவு ஆலைய
காட்டுமன்னார்கோயில் அருகே அரிசி ஆலை இயந்திரத்தில் சிக்கி படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒருவர் இறந்தார்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டை இக்பால்தெருவைச் சேர்ந்த அப்துல்அலி (50). இவர் லால்பேட்டை தோப்புத்தெருவில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றுகிறார். திங்கள்கிழமை இரவு ஆலைய இயத்திரத்தில் உள்ள பெல்ட்டை மாட்டும்போது சிக்கி படுகாயமுற்றார். கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.