முகப்பு
தற்போதைய செய்திகள்

போலீஸ் விசாரணையில் மாற்றுத்திறனாளி சாவு: குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

கடலூரில் மாவட்ட செயற்குழு கூட்டம், செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில கடலூரில் திங்கள்கிழமை நடந்தது. மாவட்ட செயலர் ஆறுமுகம், நிர்வாகிகள் உதயகுமார், மாதவன், ரமேஷ் பாபு,

Updated On : 8 அக்டோபர், 2013 at 4:23 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:39 PM

போலீஸ் விசாரணையில் இறந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கடலூரில் மாவட்ட செயற்குழு கூட்டம், செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில கடலூரில் திங்கள்கிழமை நடந்தது. மாவட்ட செயலர் ஆறுமுகம், நிர்வாகிகள் உதயகுமார், மாதவன், ரமேஷ் பாபு, கருப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பண்ருட்டியில் மாற்றுத்திறனாளி முருகன் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். முருகனின் மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முருகன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமாக நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.