முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயிலில் காணாமல் பள்ளி மாணவர்கள் மீட்பு

திட்டக்குடி தாலுக்கா ஜீவலூரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் தினேஷ்குமார் 14), இரப்பலநூரைச் சேரந்த செல்வராஜ் மகன் ஐயப்பன் ஆகிய இருவரும் காட்டுமன்னார்கோயில் ஆர்.சி.மேல்நிலைப்ப

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயிலில் காணாமல் போன பள்ளி விடுதி மாணவர்கள் இருவர் மீட்கப்பட்டனர்.

திட்டக்குடி தாலுக்கா ஜீவலூரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் தினேஷ்குமார் 14), இரப்பலநூரைச் சேரந்த செல்வராஜ் மகன் ஐயப்பன் ஆகிய இருவரும் காட்டுமன்னார்கோயில் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இருவரையும் கடந்த அக்.8-ம் தேதி முதல் காணவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதி வார்டன் அக்.9-ம் தேதி இருவரது பெற்றோர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இருவரையும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் தினேஷ்குமாரின் தந்தை வாசுதேவன், ஐயப்பனின் சித்தி பணச்செல்வி ஆகியோர் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற ஆய்விற்கு பயந்து வேப்பூரில் உள்ள மாணவர் தினேஷ்குமாரின் தந்த2ை வாசுதேவன் உறவினர் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தங்கியிருந்த இரு மாணவர்களை வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.