சிங்கப்பூரில் பதிவான அவதூறு வழக்குக்கு தடை கோரி சென்னை நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி மனு
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பதிவான அவதூறு வழக்கு ஒன்றில் தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனுதாக்கல் செய்துள்ளார்.
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பதிவான அவதூறு வழக்கு ஒன்றில் தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஏப்.6ம் தேதி, தில்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள மேக்ஸிஸ் நிறுவனம் ஆகியன குறித்து கூறினார். இதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் அந் நிறுவனத்தால், சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தடை கோரி சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிப்பதாகக் கூறிச் சென்றார்.