முகப்பு
தற்போதைய செய்திகள்

பல லட்சங்கள் பணம் ஏமாற்றியதாக மை கல்யாண் கஸ்டமர் சர்வீஸ் மீது வழக்குப் பதிவு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

பண சுழற்சி முறையில் பல லட்சங்கள் பணம் ஏமாற்றியதாக மை கல்யாண் கஸ்டமர் சர்வீஸ் நிறுவனத்தின் மீது சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் வடக்குவீதியில் மை கல்யாண் கஸ்டமர் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் கல்யாணராமன். இதன் மேலாளராக புதுச்சேரி முத்தையால்பேட்டையைச் சேர்ந்த வீரைய்யன் உள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் ஆர்.எம்.எஸ்.காலனியைச் சேர்ந்த அமீதுதீன் மகன் அமீர்சையது என்பவர் சுழற்சி முறையில் பணத்தை விட்டு அதிக பணம் தருவதாக தன்னிடம் பணத்தை பெற்று பல லட்சங்கள் பணத்தை ஏமாற்றிவிட்டதாக மேற்கண்ட இருவர் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நகர போலீஸார் மேற்கண்ட இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.