கடலூரில் இருந்து கோவைக்கு பயணிகள் ரயில்: கே.எஸ்.அழகிரி தகவல்
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி. கடலூரில் இருந்து விருத்தாசலம் வழியாக கோவைக்கு பயணிகள் ரயில் விடுவதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டு
கடலூரில் இருந்து கோவைக்கு பயணிகள் ரயில் விடுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக கடலூர் எம்.பி கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி. கடலூரில் இருந்து விருத்தாசலம் வழியாக கோவைக்கு பயணிகள் ரயில் விடுவதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் விகிதாச்சாரம் குஜராத்தில் தான் அதிகம் உள்ளது. இது ஒன்றே அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தும்.
இந்தியா, சீனாவிற்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடு. தற்பொழுது எழுந்துள்ள தற்காலிக பொருளாதார பின்னடைவு நிரந்தரமானது அல்ல. அவற்றை நாம் வெற்றி கொள்வோம். மீனவர் பிரச்சினையில் தீர்வு காண தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசும், இந்திய அரசும் இரு நாட்டு மீனவர்களை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கொண்டுள்ளன. தமிழக அரசு மனது வைத்தால் பிரச்சினைக்கு எளிதாக தீர்வு காண முடியும்.
Advertisement
நவம்பர் மாதத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரம் நெய்வேலியில் தானே புயலில் பாதிக்கப்பட்ட முந்திரி, பலா, தென்னை, சவுக்கு விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.600 கோடி வழங்க உள்ளார் என்றார்.