தேமுதிக, மதிமுகவுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ்
பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை சிறையில் குருவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு
மக்களவைத் தேர்தலில் தேமுதிக, மதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை சிறையில் குருவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:-
குரு ஆரோக்கியமாக உள்ளார். மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.தனித்தே போட்டியிடுவோம்.தேமுதிக, மதிமுகவுடனும் கூட்டணி அமைப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நாங்கள் நடத்தவில்லை என்றார் அவர்.
மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.எலைட் கடைகளை மூட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:-
எலைட் மதுக்கடைகளை வேறொரு பெயரில் தமிழக அரசு திறக்க முயற்சித்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். காந்தி பிறந்த நாளான அக்.2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்த கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூடக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனவே மக்களின் உணர்வுகளை மதித்து மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். எலைட் கடைகளைத் திறந்து வணிக வளாகங்களை மது வளாகங்களாக மாற்றும் முடிவையும் அரசு கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.