மின்சாரம் பாய்ந்து பெண் பலி
அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ஞானசேகரன் மனைவி கலாவதி(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டு காம்பவுண்டுக்குள் துணைகளை காயப்போடுவதற்காக கட்டி வைத்திருந்த கம்பியை
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:53 PM
தேனி அருகே அரண்மனைப்புதூரில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.
அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ஞானசேகரன் மனைவி கலாவதி(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டு காம்பவுண்டுக்குள் துணைகளை காயப்போடுவதற்காக கட்டி வைத்திருந்த கம்பியை தொட்ட கலாவதி, மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். துணி காயப்போடும் கம்பி மீது மின் வயர் உராய்ந்ததால் மின் கசிவு ஏற்பட்டு, துணி காயப்போடுவதற்காக கம்பியை தொட்ட கலாவதி மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுறது. இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.