முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்விக் கடன் வழங்க ரூ.7,000 லஞ்சம்: வங்கி மேலாளர் கைது

தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி(45). இவரது மகள் உதயராணி(18) பெங்களூருவில் பி.எஸ்.சி.,நர்சிங் படித்து வருகிறார். உதயராணிக்கு ரூ.2 லட்சம் கல்விக் கடன் வழங்கக்

Updated On : 25 அக்டோபர், 2013 at 5:21 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:56 PM

தேனியில் கல்விக் கடன் வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கியதாக செண்ட்ரல் வங்கி கிளை மேலாளரை வியாழக்கிழமை இரவு சி.பி.ஐ.,போலீஸôர் கைது செய்தனர்.

தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி(45). இவரது மகள் உதயராணி(18) பெங்களூருவில் பி.எஸ்.சி.,நர்சிங் படித்து வருகிறார். உதயராணிக்கு ரூ.2 லட்சம் கல்விக் கடன் வழங்கக் கோரி தேனியில் உள்ள செண்ட்ரல் வங்கியில் பாலுச்சாமி விண்ணப்பித்துள்ளார். கல்விக் கடன் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று பாலுச்சாமியிடம் வங்கியின் கிளை மேலாளர் முத்துக்குமார்(45) கேட்டாராம். இது குறித்து தேனி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் பாலுச்சாமி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை சி.பி.ஐ.,போலீஸாருக்கு தேனி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர். சி.பி.ஐ.,போலீஸாரின் ஆலோசனைப்படி, வங்கி மேலாளார் முத்துக்குமாரை அவரது வீடு உள்ள ரத்னாநகர் பகுதியில் இரவு 10.50 மணிக்கு சந்தித்த பாலுச்சாமி, கல்விக் கடன் வழங்குவதற்கு லஞ்ச முன் பணமாக ரூ.7,000-ஐ முத்துக்குமாரிடம்  கொடுத்தாராம். முத்துக்குமார் பணத்தை பெற்றுக் கொண்டதும், சி.பி.ஐ., காவல் ஆய்வாளர்கள் சரவணன், ரஞ்சித்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.