கேள்வி கேட்டதால் ஆத்திரம்?: முன்னாள் எம்.எல்.ஏ.வை பஸ்ஸிலிருந்து தள்ளிய நடத்துனர்
சிவகங்கையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் நேற்று இரவு பயணம் செய்தார் ஆலங்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகர். கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வான இவர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சிவகங்கையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் நேற்று இரவு பயணம் செய்தார் ஆலங்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகர். கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வான இவர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பேருந்து கீரமங்கலம் அருகே சென்றபோது, இவர், கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைந்ததில் அரசுப் பேருந்து நடத்துனர் முனுசாமி கோபம் அடைந்தாராம். ஒரு வேகத்தில் அவர் ராஜசேகரைப் பிடித்துத் தள்ளியதாகத் தெரிகிறது.
இதில், காயமடைந்த ராஜசேகர், உடனடியாக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடத்துனர் முனுசாமி மீது கீரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.