முகப்பு
தற்போதைய செய்திகள்

எஸ் பி பட்டிணத்தில் மனைவியை கொலைசெய்ய முயற்சி கணவர் கைது

திருவாடானை தாலுகா எஸ் பி பட்டிணத்தை சேர்நதவர் மனைவியை மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்த கணவரை போலிசார் கைது செய்யபட்டு விசாரித்து வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:31 PM
பகிர்:

திருவாடானை தாலுகா எஸ் பி பட்டிணத்தை சேர்நதவர் மனைவியை மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்த கணவரை போலிசார் கைது செய்யபட்டு விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா எஸ் பி பட்டிணத்தை சேர்ந்தவர் அக்பர் அலி(30)இவருக்கு அதே ஊரை சேர்ந்த முர்ஜிதாபானு(25) இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றன.அக்பர் அலி தினந்தோரும் மது அருந்துவது வழக்கம் மது அருந்துவதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.செவ்வாய்கிழமை இரவு அதேபோல் பணம் கேட்டு முர்ஜிதா பானுவை  தொந்தரவு செய்ததில் இருவருக்கும் தகராரு ஏற்பட்டுள்ளது.                      இதில் கணவர் அக்பர் அலி மனைவியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார், இதில் முர்ஜிதா பானு பலத்த காயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.     தகவலறிந்த எஸ் பி பட்டிணம் போலிசார் அக்பர்அலியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →