டாஸ்மாக் கடையில் ரூ. 8.75 லட்சம் பணம் கையாடல்: 4 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனைக் கணக்கில் இருந்து ரூ. 8.75 லட்சம் பணம் குறைந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. டாஸ்மாக் துறை அதிகாரிகள் நடத்திய
சேலம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 8.75 லட்சம் பணம் கையாடல் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 4 பேர் மீது இன்று வழக்குப் பதிவு செய்தனர்.
சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனைக் கணக்கில் இருந்து ரூ. 8.75 லட்சம் பணம் குறைந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. டாஸ்மாக் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடை ஊழியர்கள் அப்பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.இது குறித்து சேலம் மண்டல டாஸ்மாக் நிர்வாக மேலாளர் சிலம்பரசன், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், கடையின் மேற்பார்வையாளர் ஆர்.சி.செட்டிபட்டியைச் சேர்ந்த பிரகாசம், விற்பனையாளர் சண்முகசுந்தரம், பார் உதவியாளர்கள் முனுசாமி, முத்துசாமி ஆகிய 4 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் குற்றப்பிரிவு போலீஸார், 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Advertisement