கருணாநிதி மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கு
திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் வழக்குரைஞரான ஜெகன் இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், திமுகவின் கட்சி பத்திரிக்கையில், நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் பேசுகையில், அமைச்சர்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கட்டுரை வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே, கட்டுரையை வெளியிட்ட ஆசிரியர் மீதும், திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.