நெல்லை அருகே முதியவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து சாவு
திருநெல்வேலி அருகே 85 வயது முதியவர் தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி இறந்தார்.
திருநெல்வேலி அருகே 85 வயது முதியவர் தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி இறந்தார்.
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரையை சேர்ந்த சுடலைமுத்து மகன் சிவன் (85). இவர் முன்னீர்பள்ளம் அருகே செங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
மனைவியுடன் செங்குளத்தில் வசித்து வந்த சிவனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த 200 லி்ட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.