மாற்று மருத்துவத்தில் ஈடுபட்ட இருவர் கைது
சிதம்பரம் எடத்தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் நாராயணன் (40). இவர் ஆர்.எம்.பி மருத்துவம் படித்துள்ளார். ஆனால் இவர் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும், காரைக்காட்டு சொக்கலிங்கம்
சிதம்பரம் நகரில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர்.
சிதம்பரம் எடத்தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் நாராயணன் (40). இவர் ஆர்.எம்.பி மருத்துவம் படித்துள்ளார். ஆனால் இவர் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும், காரைக்காட்டு சொக்கலிங்கம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த திருஞானம் ஏ.ஹெச்.எம் படித்துவிட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும் புதன்கிழமை சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மேற்கண்ட இருவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.